ஸ்பானிஷ் ஆடை விற்பனைக் கடையொன்று வெளியிட்டுள்ள விளம்பர வாசகமே நீங்கள் தலைப்பில் பார்த்தது, Desigual என்ற கடைக்கு முன்பு அரை நிர்வாணமாக வருபவர்களுக்கு பிடித்த உடையை இலவசமாக வழங்குகிறது.. “அரை நிர்வாணமாக உள்ளே வந்தவர்கள்
முழுதாய் டிரஸ் பண்ணி போகலாம்” என்பது இவர்களின் தாரக மந்திரம்.
வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பால் இந்த semi-nude காட்சியறை விரைவில் San Francisco நகரிலும் திறக்கப்படவுள்ளதாம்!!! Full zoom Click Photo
இந்தூரில் கால் சென்டர் ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமான பெண்னை ஆபாச படம் எடுத்து மிரட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆம்! 24 வயதான அந்த கால் சென்டர் ஊழியர் பேஸ்புக்கில் அந்த பெண்ணிடம் பேசி பழகியுள்ளார்.
21 வயதான அந்த பெண்ணும் அவரிடம் நன்றாக பேசியுள்ளார்,இதை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பிடித்துவிட்டார்.
அதை வைத்து
அந்த பெண்னை பிளாக்மெயில் செய்துள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டார், தற்போது அந்த நபர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
பெண்களே சமுக வலைத்தளங்களில் மிக கவனமாக இருங்கள்.
இல்லையெனில் இப்படி பட்ட ஆட்களின் பிடியில் மாட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கை தான் சீரழியும்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா. 30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா. பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.
மார்த்தாண்டம்
போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வல்சலாவின் சகோதரி ராணி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ராஜேஷின் குடும்பத்தார் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், ராஜேஷ், அவரது தந்தை நாகமணி (68), தாயார் மேரி தங்கம் (65), சகோதரி ராணி (36) ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு போடப்பட்டது. அவர்களில் ராஜேஷ், நாகமணியை போலீஸார் கைது செய்தனர்.மற்றவர்கள் தப்பி விட்டனர்.
சிக்கிய தந்தை, மகனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் நாகமணி செய்த அட்டூழியங்கள். மருமகள் என்றும் பாராமல் செக்ஸ் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் நாகமணி. இதுகுறித்து பலமுறை கணவரிடம் அழுது புலம்பியுள்ளார் வல்சலா. ஆனால் ராஜேஷ் கண்டுகொள்ளவில்லை. இது மாமனாருக்கு வசதியாகப் போய் விட்டது. குடிபோதையில் பலமுறை மருமகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இந்தக் கொடுமை தாள முடியாமல்தான் குழந்தைகளுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டார் வல்சலா.
old-girlமும்பை புறநகர் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற வந்த 26 வயது இளம்பெண்ணை மருத்துவர் ஒருவர் கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ளது கட்கோபர். அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக கார் பகுதியில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு சென்றார். அப்போது மருத்துவர் அவரை கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில்,
அந்த மருத்துவர் எனக்கு பணம் கொடுத்து விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்றார். ஆனால் நான் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் மருத்துவரை தங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் அவரின் காரில் வர அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவர் காவல் நிலையத்திற்கு செல்லாமல் தப்பிவிட்டார் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவரை உடனே கைது செய்யக் கோரி மக்கள் நேற்று காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
உலகில் எத்தனையோ விசித்திரங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றுக்கு எல்லாம் மகுடம் சேர்ப்பது போல இருக்கின்ற விசித்திரம் குறித்த பதிவு இது.
அதிஷ்டம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சிலைகளுக்கு முன்னால் ஆடைகளை களைந்து செக்ஸி நடனம் ஆடுகின்றனர் பெண்கள்.
இக்காட்சிகளை புகைப்படங்களில் காணலாம்.