டாப்ஸி படத்தில்தான் இப்படி நீது சந்திரா ஆத்திரம்


பலருக்கு அரட்டை திண்ணையாக இருக்கும் ட்விட்டர், சிலருக்கு மட்டும் கருத்து திண்ணையாக இருந்து வருகிறது. இந்த திண்ணையில் அவ்வபோது நடக்கும் அக்கப் போர்களும் வாதங்களும் அட... நீங்க இவ்வளவு புத்திசாலியா? இவ்வளவு சமூக அக்கறையுள்ளவரா? என்ற அடுக்கடுக்கான ஆச்சர்யத்தை சிலர் மீது ஏற்படுத்தவும் தவறுவதில்லை. அப்படி சமீபத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்தி, இன்னொரு நடிகையின் இமேஜை சேதப்படுத்தியும் இருக்கிறார் நடிகை நீது சந்திரா.

அப்படியென்ன நடந்திருக்கிறது அங்கே?

டாப்ஸி இந்தியிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படம் ஒன்று சமீபத்தில் ரிலீசாகியிருக்கிறது. இதில் ஒரு நாய்க்கு 'ஆர்யப்பட்டா' என்று பெயர் வைத்திருக்கிறாராம் அந்த டைரக்டர். இதில்தான் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் நீது.

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரும் வாண சாஸ்திரத்தில் பெரிய மேதையுமாக திகழ்ந்தவரின் பெயர்தான் ஆர்யப்பட்டா. அவர் பெயரை போய் ஒரு நாய்க்கு வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் நன்றியில்லையா என்று பொங்கி வெடித்திருக்கிறார் நீது.

இதற்கு பதில் சொல்ல வேண்டியது டாப்ஸி இல்லை என்றாலும், எங்கேயோ இருக்கிற டைரக்டர் மீது பாய்வதை விட்டு விட்டு பக்கத்திலிருக்கிற பதுமை மீதுதானே கோபப்பட முடியும்.... அதனால் டாப்ஸி ஒழிஹ்...க!

காதலை வெளிப்படுத்திய நாயகனுடன் இணைவாரா ஆண்ட்ரியா?


தன்னை காதலிப்பதாக கூறிய நாயகன் பஹத் பாசிலுடன் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.
மலையாளத்தில் வெளியான அன்னயும் ரசூலும்  என்ற படத்தில் பஹத் பாசில், ஆண்ட்ரியா நடித்தனர்.

இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. கடந்த மாதம் சென்னை வந்த பஹத் பாசில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஆண்ட¢ரியாவை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஆண்ட்ரியா பஹத்தின் காதலை ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் இவர்களை மீண்டும் ஜோடியாக நடிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.

விளம்பர படங்களை இயக்கிய அனில் ராதாகிருஷ்ணன் என்பவர் நார்த் 24 காதம் என்ற மலையாள படத்தை இயக்க உள்ளார்.

இதில் பஹத், ஆண்ட்ரியா இருவரையும் மீண்டும் ஜோடி சேர்க்க முயன்று வருகிறார். இருவருக்கும் இடையே காதல் கிசுகிசு இருப்பதால் அது படத்துக்கு பலமாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அனில் கூறும்போது, கடந்த நவம்பர் மாதம் ஆண்ட்ரியாவை சந்தித்து என்னுடைய ஸ்கிரிப்ட் பற்றி சொன்னேன். அதேபோல் பஹத்திடம் கதை கூறி இருக்கிறேன்.

ஒரு பயணத்தின்போது நடக்கும் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இணைந்து நடிப்பதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

நீண்ட இடைவேளைக்கு பின்பு விடிவி. கணேஷுடன் மீரா ஜாஸ்மின்


தரமான நகைச்சுவை கலந்த படங்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிகராக அறிமுகமாகி, ‘இங்க என்ன சொல்லுது‘ என்ற வசனத்தின் மூலமும், தனது வித்தியாசமான வசன குரல் வளம் மற்றும் உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த V.T.V. கணேஷ் தற்போது தனது V.T.V.PRODUCTIONS என்கிற நிறுவனம் மூலம் படத்தயாரிப்பில் இறங்கி விட்டார்.

தன்னை பிரபலமாக்கிய இங்க என்ன சொல்லுது’ என்ற வசனத்தையே தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு தலைபபாக வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விடிவி கணேஷ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா நடிக்கும் இப்படத்தில் கணேஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை இதுவரை பார்த்திராத வரையில் கவர உள்ளார் சந்தானம். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீநாத், மயில்சாமி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சென்னையிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்பவர் காக்க காக்க, பில்லா 2, மற்றும் பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த R .D. ராஜசேகர்.

பிரம்மாண்டமான பல படங்களுக்கு அரங்கு அமைத்த ராஜீவன் கலை இயக்குனராக பணியாற்ற, நேர்த்தியான வேகமான படத் தொகுப்பின் மூலம் இன்றைய தலைமுறையைக் கவர்ந்த ஆன்டனி படத்தொகுப்பு செய்ய தரன் இசை அமைத்து உள்ளார்.

வானம் படத்தின் வசனகர்த்தா ஞான கிரியின் வசனத்தில், விஜய் படங்களான ப்ரியமுடன், யூத் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இப்படத்தை செல்வா என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

டால்பினை தத்தெடுத்துக் கொண்ட எமி ஜாக்ஸன்!

வாய்ப்புக்காக வளைந்து கொடுக்க மாட்டேன்!


சில்க் ஸ்மிதாவின் கடைசி கால வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் "கிளைமாக்ஸ்'. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருப்பவர் சானாகான். இப்படம் தமிழில் "நடிகையின் டைரி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட சானாகான், "உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான செயல்தான் என்றாலும், வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையைக்கூட பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை. அது அந்தந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல. நான் வாய்ப்புகளுக்காக வளைந்து கொடுப்பதில்லை' என்று பேசப்பேச படக்குழு அதிர்ந்துவிட்டதாம்.

நானும் கூடவே இருக்கேன் அஜீத்திடம் அடம் பிடித்த மருத்துவர்


சிறுத்தை சிவா படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டுதான் தனது காலுக்கு ஆபரேஷன் என்று 

உறுதிபட கூறிவிட்டார் அஜீத். அவரது தொழில் பக்தியை கண்டு உள்நாடும் வெளிநாடும் ஒரேயடியாக நெக்குருகி நிற்க, அவரையே நெக்குருக வைக்கிறாராம் அஜீத்தின் டாக்டர்.
கார் சேசிங் காட்சியில் நடித்தபோது தனது காலில் விபத்து ஏற்பட்டு மேலும் ஒரு விழுப்புண் பெற்றார் அஜீத். அதற்கப்புறம் ஆபரேஷன் பண்ணாம இந்த காலை சரி பண்ண முடியாது என்று அவரது மருத்துவர் கூறிவிட, அதையும் செஞ்சுடலாம். ஆனால் ஷுட்டிங் பாதிக்குமே என்றார் அஜீத். இதற்காக பிரத்யேகமாக ஒரு காலுறையை தயாரித்து அணிந்தபடியே போக்கு வரத்திலிருந்தார் அஜீத்.
இந்த உறையோடுதான் அவர் திரையுலக உண்ணாவிரதத்திற்கும் வந்திருந்தார். விஐபி நடிகர்களின் முகத்தை விட இந்த காலுறைதான் அன்று அதிக புகைப்படக்காரர்களின் கேமிராவில் இடம் பிடித்தது. அதுபோகட்டும்... இப்போதைய விஷயத்துக்கு வருவோம்.
அஜீத்தின் இந்த குடும்ப டாக்டர் இப்போதெல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிடுகிறாராம். இந்த ஆபரேஷன் வரைக்கும் உங்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்வது அவசியம். ஷுட்டிங்கை அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க, நான் தினமும் ஸ்பாட்டுக்கு வருவதற்காகவாவது அனுமதிங்க என்றாராம். அஜீத்தின் பர்மிஷனுக்கு பிறகு தினந்தோறும் வந்தும் விடுகிறாராம்.
டைரக்டர் வேகமாக ஆக்ஷன் சொன்னாலும், மனசுக்குள் கட் சொல்லி மாய்ந்து மாய்ந்து போகிறாராம் இந்த மருத்துவர்.

ஹன்சிகாவை கோபப்படுத்திய காஜல்


கொலிவுட்டின் சின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டு வந்த கொழு கொழு நாயகி ஹன்சிகாவை கடுப்பேற்றி உள்ளாராம் காஜல் அகர்வால்.
அமலாபால், சமந்தா போன்ற நாயகிகள் ஆந்திராவில் செட்டிலாகி விட, தனக்கு போட்டி எதுவும் இல்லை என சுற்றி திரிந்தார் ஹன்சிகா.

ஆனால் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளாராம் காஜல் அகர்வால்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா போன்ற படங்களில் நடித்து வரும், காஜல் மும்பையில் முகாமிட்ட படியே கொலிவுட் கதவுகளை பலமாக தட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும் சில தமிழ் படங்களின் கதாநாயகி வாய்ப்பும் கிடைத்துள்ளதாம்.

இதனால் இதுவரை கொலிவுட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வந்த ஹன்சிகா பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.

விபச்சாரப் பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ள நோட்டைத் தரும் ஆண்கள் !


விபச்சாரப் பெண்களிடம் வரும் ஆண்கள், உல்லாசம் அனுபவித்து விட்டு போகும்போது கள்ளநோட்டுக்களைக் கொடுப்பதாக கொல்கத்தாவில் சர்ச்சை எழுந்துள்ளது.கொல்கத்தாவின் மிகப் பெரிய விபச்சார மையமான சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதிக்கு நிறையப் பேர் வருவது வழக்கம். எப்போதும் ஆண்களின் கூட்டம் இங்கு நிரம்பி வழியும். இங்கு வரும் ஆண்களில் பலர் கள்ள நோட்டுக்களைக் கொடுப்பதாக தற்போது பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் பல பெண்கள் ஏமாந்து தவிக்கின்றனராம்.இதையடுத்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் நல்ல பணமா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய தர்பார் மஹிளா சமான்யா கமிட்டி என்ற என்ஜிஓ நிறுவனம், விபச்சாரப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

பரத் அளவிற்கு சத்தியமாக என்னால் நடிக்க முடியாது: தனுஷ்


கொலிவுட்டில் நீண்ட இடைவேளைக்கு பின்பு மூன்று விதமான கதாபாத்திரத்தில் 555 என்ற படத்தில் நடித்து வருகிறார் பரத்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தில் நடித்த பரத் குறித்து தனுஷ் கூறுகையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, பரத்தின் புகைப்படத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்துள்ளார் என்பது புகைப்படங்களைப் பார்த்த போது தெரிந்தது.

இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால், பரத் அளவிற்கு சத்தியமாக என்னால் சிரமப்பட்டு நடித்திருக்க முடியாது.

முயற்சி மெய்வருத்த கூலி தரும்ன்னு சொல்வாங்க. அதுபோல, பரத் மெய் வருத்தியிருக்கிறார் என்றும் அது கண்டிப்பாக அவருக்கு கூலியை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.