பின்புறம் முழுவதும் தெரியும்படி நடித்தால் அது நிர்வாணமாகாது - பூஜா காந்தி..!

கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்தது பற்றி பூஜா காந்தி பரபரப்பான பதில் அளித்தார். "கொக்கி", "திருவண்ணாமலை" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் "தண்டுபால்யா" என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்குகிறார். இதில் கொள்ளை கும்பல் தலைவியாக நடிக்கும் பூஜா, போலீசில் பிடிபட்டதும் அவரை நிர்வாணமாக்கி விசாரிக்கிறார்கள். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சியில் நடித்தது பற்றி பூஜா காந்தி கூறியதாவது.... "தலை முதல் கால் வரை ஒட்டுத்துணிகூட இல்லாமல் இருப்பது தான் டிக்ஷ்னரிப்படி நிர்வாணம். நான் அப்படி நடிக்கவில்லை. சேலை போர்த்தி இருப்பேன். அதை போலீசார் வலுக்கட்டாயமாக நீக்க முயல்வார்கள். நான் போராடுவேன். இந்த சீனில் பின்புறம் முழுவதும் தெரியும்படி நடித்தேன். லட்சுமி என்ற மாஃபியா கும்பல் தலைவியிடம் போலீசார் நடத்திய நிஜ விசாரணை காட்சிகளின் வீடியோவை இயக்குனர் எனக்கு போட்டுக்காட்டினார். லட்சுமியின் கூட்டாளிகளையும் நிர்வாணமாக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்றார். லட்சுமி கதாபாத்திரத்தை தான் பூஜா ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜி.வி பிரகாஷ் - சைந்தவி திருமணம்

 தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் ஒருவராக திகழும் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியும், பின்னணி பாடகியுமான சைந்தவியை எதிர்வரும் ஜூன் 27ம் திகதி கரம்பிடிக்கிறார்.இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்தும் கூட ஏனோ, இவர்களின் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் ஜி வி பிரகாஷ் ஒரு படத்தில் கதாநாயகனாக கூட நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் மாதம் 27ம் திகதி திருமணம் நடக்க உள்ளது.கில்லாடி திரைப்படத்தின் பிரஸ் மீட் படங்கள்சூர்யாவின் சிங்கம் 2 : புதிய படங்கள் 2013ஒரே ஞாபகம் : போஸ்டர்ஸ் படங்கள் 2013எட்டுத்திக்கும் மத யானை : திரைப்பட பூஜை படங்கள்2013நாரதன் : திரைப்பட வெளியீடு படங்கள் 2013யாருடா மகேஷ் : ட்ரெய்லர் வெளியீடு அழைப்பிதழ் 2013ஶ்ரீ காந்தின் ஓம் ஷாந்தி ஓம் : திரைப்பட போஸ்டர்ஸ் 2013ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. அன்று மலை 6 மணிக்கு மேல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே மண்டபத்தில் நடக்க உள்ளது.

அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ள அம்பிகா!

கடந்த, 1980களில், தமிழ் திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த, – ராதா சகோதரிகளுக்கு, ஆரம்பத்திலேயே, தொழில் துறையிலும் ஆர்வம் உண்டு. தாங்கள் நடிக்கும் காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை, சென்னையில், நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான, ராதா, திருமணத்துக்கு பின், மும்பையில், ஓட்டல் பிசினசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவளத்தில், அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார். தற்போது, சகோதரிகள் இருவரும் இணைந்து, கேரளா – தமிழக எல்லையில், புளியாரை என்ற இடத்தில், புதிதாக, அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ளனர். “செங்கோட்டை – கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள, இந்த ஓட்டல், இந்த பகுதியில், படப் பிடிப்புக்காக வரும், படக் குழுவினருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர், சகோதரிகள்.

நடிகை ஆசை காட்டி மோசடி - இயக்குநர் மீது இலங்கை பெண் புகார் !!

படத்தில் கதாநாயகி ஆக்குவதாகக் கூறி ரூ 4 லட்சம் பணத்தைப் பறித்துவிட்டதாக சினிமா இயக்குநர் ஒருவர் மீது புகார் கூறியுள்ளார் டிவி நடிகை விஜயலட்சுமி. சென்னை ரெட்ஹில்ஸ் பாடியநல்லூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர் நேற்று தனது கணவர் தர்மாவுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.பின்னர் அவர், நிருபர்களிடம் பேசுகையில்..."இலங்கையைச் சேர்ந்த நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டேன். டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. துளசி உள்பட டி.வி. தொடர்களில் நடித்தேன். இந்த நிலையில், என்னை சினிமாவில் கதாநாயகி ஆக்குவதாக சொல்லி இயக்குநர் ர் ஒருவர் ஆசை காட்டினார். அவரது ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.4 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் என்னை கதாநாயகி என்று விளம்பர படுத்தியதோடு சரி. ஏமாற்றிவிட்டார்.இப்போது அவர் ஒரு பெரிய மோசடி பேர்வழி என்று தெரிய வந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக நிறைய பேரிடம் மோசடி செய்துள்ளார். வங்கியில் கடன் வாங்கித் தருவதாகவும், வீட்டுவசதி வாரியத்தில் நிலம் வாங்கித் தருவதாகவும் பல பேரிடம் பணம் சுருட்டி உள்ளார். இப்போது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்துள்ளேன். என்னோடு மேலும் இருவரும் புகார் கொடுத்து இருக்கிறார்கள்," என்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவரது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார் கமிஷனர்.- See more at: http://vannimedia.com/site/news_detail/13159#sthash.pgZ50ak7.dpuf