பில்லா 2′ ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!


‘பில்லா 2′
மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது.
முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது அஜீத் ரசிகர்களுக்கு. சரியாக 12 மணிக்கு வெளியான உடன் அதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

போங்கடி நீங்களும் உங்க காதலும்


குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். அதன்பிறகு ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், இப்போது போங்கடி நீங்களும் உங்க காதலும் என்றொரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஆத்மியா, காருண்யா என்று இரண்டு ஜோடிகள். 

இப்படம் பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில், முன்பெல்லாம் காதல் ரொம்ப உண்மையாக இருந்தது. ஆனால் சமீபகாலத்து காதலை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதாவது இதற்கு பெயர் காதலா? இல்லையா? என்பதே புரியவில்லை.


ஏதோ பழகுகிறார்கள். திடுதிப்பென்று பிரிகிறார்கள். பின்னர் அதே வேகத்தில் வேறு ஜோடி தேடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்து காதலைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லும் அவர், இப்படத்தை நான் ஜாலியாக இயக்கியிருந்தாலும், காதல் என்றால் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறேன் என்கிறார்.

படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்



படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்
சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் புதிய படம் குட்டிப்புலி. இந்த படத்தில் அவருடன் லட்சுமிமேனன், சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முத்தையா படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பெண் தான் கடவுள். பெண் தான் வீரம் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தில், தீப்பிடிக்கும் வீட்டிற்குள் இருந்து சசிகுமார் தப்பிச்செல்வது போன்ற ஒரு காட்சியை படமாக்கினார்களாம். அதற்காக ஒரு நபர் குடியிருந்த தனது வீட்டையே தர முன்வந்தாராம்.
இதையடுத்து அந்த வீட்டில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீயை கொளுத்தி படமாக்கியுள்ளனர். அதையடுத்து, வீட்டை படப்பிடிப்புக்காக கொடுக்க முன்வந்த அந்த நபருக்கு அதே இடத்தில் புதிய வீட்டையும் கட்டிக்கொடுத்தார்களாம்.

ரியங்கா சோப்ராவுடன் நெருங்கி பழக மாட்டேன்: நிலா


 எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், பிரியங்கா சோப்ராவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார் நிலா.சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபலமான நாயகிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் சில நாயகிகள் காட்டிக் கொள்வார்கள்.ஆனால் பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா(மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார்.பிரியங்கா உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார்.அவர் கூறுகையில், கேங்ஸ் ஆப் கோஸ்ட்


இந்தி படத்தில் நடிக்கிறேன். பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்தான் நான். ஆனால் அவருடன் எனக்கு நெருக்கமான நட்போ தொடர்போ கிடையாது.என் பெற்றோரும் அவர் பெற்றோரும் தான் நன்கு பழகுவார்கள். தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்பு பல படங்களில் நடித்தேன்.விரைவில் பரத்துடன் நடித்துள்ள கில்லாடி திரைக்கு வரவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழில் நடிப்பது போல் இந்தியிலும் நீண்ட நாட்களுக்கு பின்பு நடிக்கிறேன்.இப்படத்தின் கதையை இயக்குனர் சதீஷ் சொன்ன போது சிரித்துக் கொண்டே இருந்தேன். அவ்வளவு கொமடி. கடந்த ஒரு வருடமாக நல்ல படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு உடையை குறைக்க குறைக்க குளிரவே இல்லிங்க


‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால்,


ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு!அப்படி என்னதான் சொன்னார்?“இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார்.நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாதான்னு, சத்தியம் கூட பண்ணுவேன்” என, உருகி உருகிக் கூறினார்.சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ!