தாண்டவம்
திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லக்ஷ்மி
ராய் இங்கிலாந்த்து நாட்டில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளார்.
தமிழில் லக்ஷ்மி ராய் நடித்து காஞ்சனா, மங்காத்தா இரண்டு படங்களும்தான்
வெற்றிகரமாக ஓடியுள்ளன. அதன்பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போக
கன்னடம் மற்றும் இந்தி என நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விக்ரமின் தாண்டவம் திரைப்படத்தில் நடிக்க நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்ப்பு வந்தது.
இதில் அனுஷ்காவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். இதன்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லண்டனில் முக்கிய
காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. இதற்காக
படக்குழுவினர் அங்கு தங்கி உள்ளனர்.
அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லட்சுமி ராய்க்கு அறை ஒதுக்கப்பட்டது.
ஆனால் அந்த ‘அறை’ பிடிக்காமல் ஓட்டலில் லட்சுமிராய் ரகளையில் ஈடுபட்டதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டல் ‘அறை’ வசதியாக இல்லை. அதில் தங்க மாட்டேன் என்று படக்குழுவினருடன்
தகராறு செய்தாராம். படப்பிடிப்புக்கு செல்லவும் மறுத்து விட்டதாக
கூறப்படுகிறது.
இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப குழுவினர் படப்பிடிப்பு தளத்தில்
லட்சுமிராய்க்காக பல மணி நேரம் காத்து இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.
இதனால் இயக்குனர் விஜய் தவித்தார்.
‘அறை’ பிடிக்காமல் லட்சுமிராய் தகராறு செய்யும் தகவல் விஜய்க்கு
தெரிவிக்கப்பட்டது. உடனே லட்சுமி ராய்க்கு வேறு அறையை மாற்றிக் கொடுக்க
சொன்னாராம். புது அறை கிடைத்த பிறகே சமாதானமாகினாராம் லட்சுமிராய்.
சாலையோர விதிமுறைகளை மீறுவோருக்கு தண்டப்பணம் அறவிடுவது வழக்கம், பணம் கட்ட முடியாதவர்களுக்கு சிறைத்தண்டனை, இந்த இரண்டிலும் இருந்து தப்புவது எப்படி ? பெண்களுக்கு மட்டுமே இந்தப் பாக்கியம்