இத்தாலியில் கவர்ச்சி காட்டிய இலங்கை அழகி !

இலங்கையின் சூப்பர் மோடல் அழகிகளில் ஒருவர் Uddima Oshadi.
இவர் இத்தாலி நாட்டில் இடம்பெற்ற Miss Auto Tuning VI அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்டு கவர்ச்சியில் கலக்கி உள்ளார்.
இவரர் போட்டியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தரு



கின்றோம்.

நடிகை ஷார்மிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குனர்

பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குனரை நடிகை ஷார்மி கன்னத்தில் அறைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.கொலிவுட்டில் காதல் அழிவதில்லை, லாடம் படங்களில் நடித்த சார்மி, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜூனியர்
என்.டி.ஆர், சித்தார்த், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்துள்ளார். இந்நிலையில் சார்மிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளன.எனவே இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறார். தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் சார்மியை நடிக்க வைப்பதாக கூறினார்.தனது அலுவலகத்துக்கு வந்து கதை கேட்கும்படியும் அழைத்தார். இதை நம்பி சார்மி அவரது அலுவலகத்துக்கு சென்றபோது அங்கு சார்மிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சார்மி, தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இயக்குனரை ஆவேசமாக தாக்கினார்.இந்த விடயம் தெலுங்கு பட உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்டர்நெட்டில் ஆபாச படம்! பாடகி சின்மயி பரபரப்பு புகார்!


இன்டர்நெட்டில் தன்னை ஆபாசமாக சித்தரித்து படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி சின்மயி போலீஸ் கமிஷன ரிடம் புகார் அளித்தார். சினிமா பாடகி சின்மயி (22). இவர் சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.அவர் இன்று காலை, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு
ஒன்றை அளித்தார். அதில் சின்மயி கூறியிருப்பதாவது: கடந்த 2 வருடமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன்.அதில், சிலர் என்னுடைய உருவ படங்களை நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து வெளியிட்டதுடன், பல்வேறு ஆண்களுடன் பல்வேறு கோணத்தில் அறைகுறை ஆடையுடன் இருப்பது போல¢ படங்கள் வெளியிட்டுள்ளனர். அத¤ல் வெளியிட்டுள்ள கருத்துகளும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் உள்ளன. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மும்பை, சாய்பாபா டெலிபிலிம்சை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மேடை நிகழ்ச்சியில் பாடியதற்காக எனக்கு ரூ.17 லட்சம் தரவேண்டும். அவர் அந்த பணத்தை தரவில்லை. அதையும் பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மனுவில் சின்மயி கூறியுள்ளா

மீண்டும் பத்மபிரியா: தங்கமீன்கள் என்ற படத்தில்

 நடிகை பத்மபிரியா தமிழில் கடைசியாக பொக்கிஷம் படத்தில் நடித்தார். 2009-ல் இப்படம் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தங்கமீன்கள் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தைகவுதம்மேனன் தயாரிக்கிறார். ராம் இயக்குகிறார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் படத்தை டைரக்டு செய்தவர். தங்க மீன்கள் படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். சாதனா,
ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர்கள் பாலு மகேந்திரா, லிங்குசாமி, கவுதம், பிரபு சாலமன், சேரன், வெற்றிமாறன், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா, அனிருத் பங்கேற்றனர். லிங்குசாமி வெற்றி மாறன் பேசும் போது இயக்குனர் ராம் இந்த படத்தின் கேரக்டருக்கு மிக பொருத்தமாக உள்ளார் என்றார்.இந்த படத்தின் டிரெய்லர் தனக்கும் தன் மகளுக்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது என்று பிரபுசாலமன் தெரிவித்தார். தந்தை மகள் இடையிலான பாச உணர்வை சித்தரிக்கும் கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளதாக இயக்குனர் ராம் தெரிவித்தார்.



என்னது ஒரு கோடி ரூபாய் சம்பளம்மா மறுக்கிறார் சமந்தாஎன்னது ஒரு கோடி ரூபாய் சம்பளம்மா மறுக்கிறார் சமந்தா



ஹைதராபாத்: சினிமாவில் நடிக்க 1.75 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ்,தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார்சமந்தா. எந்த அளவிற்கு பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரைப்பற்றி கிசுகிசுவும் பரவுகிறது.காதல் கிசுகிசுவை அடுத்து அவர் தன்னுடைய சம்பளத்தை 1.75 கோடி ரூபாயாக உயர்த்தி
விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சமந்தா.ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:சம்பளம் விஷயத்தில் எனக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் கேட்பதாக செய்திகள் பரவியுள்ளன. இது தவறான தகவல். நான் யாரிடமும் அவ்வளவு தொகை கேட்கவில்லை. எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு தைரியம் இல்லை.சம்பளத்தை திருப்பித் தருவேன்ஆறு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த படங்களின் தகாரிப்பாளர்களிடம் விசாரித்து நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் வாங்கியதாக நிரூபித்தால் வாங்கிய சம்பளம் அனைத்தையும் திருப்பி தந்துவிட தயாராக இருக்கிறேன்.அனைத்தும் ஹிட்தமிழ், தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது. மேலும் அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கிறது. தெலுங்கில் நடித்த ஆட்டோ நகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.ரூ.1 கோடி கூட வாங்கலைஎன் அதிர்ஷ்டத்தால் படங்கள் நன்றாக ஓடுகின்றன. அதில் சந்தோஷம் அடைகிறேன். ஆனால் என்னுடைய சம்பளம் இன்னும் ரூ.1 கோடியை எட்டவில்லை என்று கூறினார் சமந்தா.