அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ள அம்பிகா!

கடந்த, 1980களில், தமிழ் திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த, – ராதா சகோதரிகளுக்கு, ஆரம்பத்திலேயே, தொழில் துறையிலும் ஆர்வம் உண்டு. தாங்கள் நடிக்கும் காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை, சென்னையில், நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான, ராதா, திருமணத்துக்கு பின், மும்பையில், ஓட்டல் பிசினசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவளத்தில், அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார். தற்போது, சகோதரிகள் இருவரும் இணைந்து, கேரளா – தமிழக எல்லையில், புளியாரை என்ற இடத்தில், புதிதாக, அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ளனர். “செங்கோட்டை – கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள, இந்த ஓட்டல், இந்த பகுதியில், படப் பிடிப்புக்காக வரும், படக் குழுவினருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர், சகோதரிகள்.