பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி
நேரம் நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறார்.
லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மார்ப்பு நழுவினாலோ அல்லது
இடுப்பு லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக்
கிடந்தாலோ நம்ம ஊர்ப் பெண்கள் வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது
போய் விட்டது.
நல்லபடியாக கிடக்கும் துணியைக் கூட இழுத்து கோக்குமாக்காக விட்டுக்
கொள்வதுதான் இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஷெர்லின் சோப்ராவும்
தான் கவர்ச்சியாக இருந்த கோலத்தை சொல்லிச் சொல்லி புளகாங்கிதமடைந்து
கொண்டிருக்கிறாராம். அதாவது காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கிறார் ஷெர்லின்
சோப்ரா. படம் முழுக்க இவருக்கு நிர்வாணக் காட்சிகள்தான் நிறையய .
சமீபத்தில் கூட அவரை நிர்வாணமாக வைத்து பல காட்சிகளை எடுத்தனர். அதற்காக பல
மணி நேரம் நிர்வாணமாக செட்டுக்குள் இருந்தாராம் ஷெர்லின். நிர்வாணமாக
இருந்ததால் ஏற்பட்ட டென்ஷனைக் குறைக்க தம் அடித்தபடி காணப்பட்டாராம். இந்த
நிலையில் தற்போது மீண்டும் நிர்வாணக் கோலத்தில் நடித்துள்ளாராம். இந்தக்
காட்சிகளை 22 மணி நேரம் படமாக்கினராம். இந்தக் காட்சியின்போது உடல் முழுக்க
பாடி பெயிண்ட் அடித்திருந்தனராம் ஷெர்லினுக்கு. காட்சி தத்ரூபமாக
வந்துள்ளதாம். அந்த அளவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஷெர்லின்.