கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நேரத்தில் தெலுங்கில் பெரிய வெற்றி கொடுத்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தில் த்ரிஷா நடிக்க பிரபுதேவா இயகியுள்ளார். இந்த படபிடிப்பின் பொது இருவருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டதாக படபிடிப்பில் இருந்தவர்கள் தெரிவித்தனர். நயன்தாரா பிரிய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்கள். த்ரிஷாவும் தன் பங்குக்கு, பிரபுதேவாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘தெலுங்கில் எனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தை பிரபுதேவா அளித்தார். அவருக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரபுதேவாவுக்கு எங்கோ ஒரு மச்சமைய்யா!